பிரதீப்நேசம்

பிரநேச கவிதைகள்…

Aadhiyil Apple…

ஆதியில் ஆப்பிள்…. 

காது மடல் நுனி

கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !

கால்கள் பின்னி

ஊர்ந்த கைகளுக்கிடையே

சிக்கித்தவித்தது வெட்கம்… ! 

படர்கையில் பாதிதேகம்

நிலைக்கண்ணாடியில்…,

தோன்றி விலக,

மறைந்து சிரித்தது வெட்கம்…! 

 பின்னிரவுப்பறவையொன்று

ஜன்னல் வழிபார்த்து

சீட்டியடித்தது….. ! 

மயக்கம் பாதி, தயக்கம் மீதி…

முடிவில் முதலாவது ஜெயிக்க,

தயக்கமும், வெட்கமும்…

கட்டில் நுனியில்… ! 

தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து, 

பின்..ஒவ்வொன்றாய் பிரிய…

வியர்வைத்துளியில்,

கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. ! 

புரியாத புதிராய்புதிதாய்த்

தொடங்கத் தொடங்க,புரியாதவை

புலப்படலாயின…! 

இருபது வருடங்களாய்

பூட்டிவைத்தபொக்கிஷங்கள்

கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,

மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,

உண்டாயின…. ! 

மூச்சூக்காற்றும் வெப்பமாக,

வியர்வையில் தேகம் தெப்பமாக…!

களைத்து விலகும் போது

காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !

வாழ்க…… !

ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. ! 

                                                  பிரநேசம்.                                                  pranesam@yahoo.com

Leave a Reply